ஒணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு - கோயில் நிர்வாகம் தகவல்
Sep 10 2019 2:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மலையாள மொழி பேசும் மக்களின் பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையாக, ஓணம் கொண்டாடப்படுகிறது. சென்னையில் வாழும் மலையாள மக்களும், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக, பாரம்பரிய ஆடைகள் அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு, ஓணம் விருந்துண்டு மகிழ்வதுண்டு. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள குருவாயூரப்பன் அய்யப்பன் கோயிலில், ஓணம் பண்டிகையையொட்டி அதிகாலை 4 மணி முதல் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ராமன் நம்பூதிரி தெரிவித்தார். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஓணம் சந்தியா விருந்து வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.