தசராவுக்கு உலோகங்களாலான ஆயுதங்கள் எடுத்துவர தடை : சாதி, கட்சிக் கொடிகளை கொண்டுவரவும் தடை விதிப்பு
Sep 9 2019 9:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகழ்பெற்ற தூத்துக்குடி தசரா திருவிழாவிற்கு உலோகங்களால் ஆன ஆயுதங்களை எடுத்துவர போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இத்திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தசரா பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரத், திருவிழாவின்போது, பக்தர்கள் இரும்பு போன்ற உலோகங்களிலான ஆயுதங்கள் எடுத்து வரவும், சாதி மற்றும் கட்சி கொடிகளை கொண்டுவரவும் தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.