வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா : பெரிய தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
Sep 8 2019 12:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, பெரிய தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆண்டுப் பெருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்ற வருகிறது. விழாவின் முக்கிய பெருவிழாவான் பெரிய சப்பர பவனி எனப்படும், தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமையில் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டு பிராத்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார், சூசையப்பர், உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகிய ஏழு தேர்களில் தனியாக காட்சியளித்தனர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பழமைவாய்ந்த புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் 11-ஆம் ஆண்டு அன்பின் பெருவிழாவையொட்டி, விழாவின் கடைசி நாளான நேற்று தேர் பவனி நடைபெற்றது. வண்ண பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட புனித வேளாங்கண்ணி மாதா தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை குரு பாக்கிய ரெஜீஸ், ஸ்ரீபெரும்புதூர் பங்குத் தந்தை லாரன்ஸ் உட்பட மற்றும் பல குருக்கள் கலந்து கொண்டனர்.