திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ஏலம் : 17,200 கிலோ முடி ஏலம் - ரூ.7.62 கோடி வருவாய்
Sep 6 2019 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 17 ஆயிரத்து 200 கிலோ தலை முடியை ஏலத்தின் விட்டதன் மூலம் 7 கோடியே 62 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்தப்படும் தலைமுடி ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை ஏலம் விடப்படுகிறது. அதன்படி நேற்று, சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆன்லைன் ஏலத்தில் முதல் ரகம், இரண்டாவது ரகம், மூன்றாவது ரகம் என தலைமுடிகள் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டன. மொத்தம் 17 ஆயிரத்து 200 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதன் மூலம் 7 கோடியே 62 லட்சம் ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.