திருமலையில் சர்வ தரிசன டிக்கெட்கள் திடீர் நிறுத்தம் - திருப்பதியில் மட்டுமே விற்கப்படும் என அறிவிப்பு
Sep 5 2019 8:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் விரைவில் சுவாமி தரிசனம் செய்ய அறிமுகப்படுத்தப்பட்ட சர்வ தரிசன டிக்கெட் திட்டம், திருமலையில் கைவிடப்பட்டது.
சர்வ தரிசனம் டிக்கெட் என்ற பெயரில், ஆதார் கார்டு மூலம் நேரம் ஒதுக்கீடு செய்து டிக்கெட் வழங்கும் திட்டத்தை, கடந்த ஆண்டு மே மாதம், தேவஸ்தானம் தொடங்கியது. இதற்காக, திருப்பதி மற்றும் திருமலையில் கவுன்ட்டர்கள் அமைத்து டிக்கெட் வழங்கப்பட்டது.
திருமலையில் உள்ள பக்தர்கள், சர்வ தரிசனம் டிக்கெட்களை பெற போதிய ஆர்வம் காட்டாததால், இன்று முதல் அத்திட்டம் முற்றிலும் நிறுத்தப்படுவதாக, தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், திருப்பதியில் மட்டுமே தரிசன டிக்கெட்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.