சென்னை புரசைவாக்கத்தில் அத்திவரதர் போல் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை - நின்ற கோலத்தில் காட்சி அளிப்பதை தரிசிக்கும் பக்தர்கள்
Sep 5 2019 6:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விநாயகர்சதுர்த்தியையொட்டி சென்னை புரசைவாக்கத்தில் அத்திவரதர் சயனகோலத்தில் உள்ளது போல் வைக்கப்பட்ட விநாயகர், இன்று முதல் 3 நாட்களுக்கு நின்றகோலத்தில் காட்சியளிக்கிறார்.
தமிழகத்தில் கடந்த 2ம் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் காஞ்சிபுரம் அத்திவரதரைப்போன்று வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2ம் தேதி முதல் நேற்றுவரை சயனகோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் விநாயகர், இன்று முதல் 3 நாட்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பொதுமக்கள் ஏராளமானோர் அத்திவரதர் விநாயகரை ஆர்வத்துடன் தரிசித்து வருகின்றனர்.