நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற பூச்சொரிதல் ஊர்வலம் : ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலம்
Sep 4 2019 1:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூச்சொரிதல் ஊர்வலம் நடைபெற்றது.
நாகை அடுத்த நாகூர், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சீராளம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆவணி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழாவில், பூச்சொரிதல் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. மேலும், அசம்பாவிதங்களை தடுக்க தெருக்கள் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. நாகூர், நாகநாதர் கோயிலில் இருந்து பட்டினச்சேரி கிராம பஞ்சாயத்தார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், பூத்தட்டுகளுடன் ஊர்வலமாகச் சென்றனர்.
ஊர்வலம் கோயிலை அடைந்ததும், பூச்சொரிதல் வைபவம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. முன்னதாக சிறுமிகள் பங்கேற்ற கோலாட்ட நிகழ்ச்சி காண்போரை வெகுவாக கவர்ந்தது.