கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
Sep 1 2019 7:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
108 திவ்யதேசங்களில் இரண்டாவதாக விளங்கும் திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்யதேசங்களில் இரண்டாவதாக விளங்குவதும், திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலின் சார்பு கோயிலுமான உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயிலில் மகா சம்ப்ரோக்ஷண பூர்வாங்க பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் கடந்த 28ஆம் தேதி இரவு தொடங்கின. இதையடுத்து, 29ஆம் தேதி திருக்காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு தொடர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
இன்று காலை 8.30 மணியளவில் யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்றது. தொடர்ந்து குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக பட்டாச்சாரியார்களால் எடுத்துவரப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் திரு.ஜெயராமன் உள்ளிட்ட பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.