சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2,600 சிலைகள் வைக்க அனுமதி : சென்னை மாநகர காவல் துறை அறிவிப்பு
Sep 1 2019 5:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஒற்றைச் சாளர முறையில், 2 ஆயிரத்து 600 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, சென்னையின் பல்வேறு இடங்களில், 2 ஆயிரத்து 600 சிலைகள் வைத்து வழிபட, சென்னை மாநகர காவல் துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 700 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு, 2 ஆயிரத்து 600 சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பதற்றமான இடங்களில், தேவையான பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், விநாயகர் சிலைகள் வைக்க, ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிக்கப்பட்டுள்தாகவும், சென்னை மாநகர காவல் துறை தெரிவிக்கப்பட்டு உள்ளது.