அமர்நாத் யாத்திரை நிறைவு - 3.39 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம்
Aug 16 2019 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமர்நாத் யாத்திரை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 3 லட்சத்து 39 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
காஷ்மீரில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்யவதற்கான 46 நாட்கள் யாத்திரை, கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக கடந்த 31ம் தேதி அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. 3 நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டது. கடந்த 5ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததால், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் யாத்திரை மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்த சூழலில் அமர்நாத் பனிலிங்கத்தை 3 லட்சத்து 39 ஆயிரம் பக்தர்கள் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்திருந்தனர். இந்நிலையில், ஷ்ராவன் பூர்ணிமா நாளான நேற்றுடன் அமர்நாத் யாத்திரை நிறைவடைந்தது. இதனையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அமர்நாத் யாத்திரை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.