கள்ளழகர் திருக்கோவிலில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஆடித்தேரோட்டம் : கோவிந்தா கோவிந்தா கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
Aug 15 2019 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தின் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலின் ஆடித்தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் முழங்க தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
மதுரை அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் திருக்கோவிலின் ஆடித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தேரோட்ட நிகழ்ச்சி, இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுந்தராஜபெருமாளுடன் ஸ்ரீதேவி பூமா தேவியுடன் வலம்வந்தனர். தேரினை அப்பகுதியைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க கோவில் பிரகார வீதிகளில் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக சுந்தராஜபெருமாளுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. தேரின் முன்பாக கருப்ப சாமியாடியகளும், பெண்களும் ஆண்களும் கோலாட்டம் ஆடியும் வந்தனர்.
பண்பாட்டுத்திருவிழா போல நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பாதாக பாரம்பரிய வழக்கப்படி பக்தர்கள் மாட்டுவண்டியில் வருகை புரிந்தனர்.