சிலைதிருட்டு பயம் காரணமாகவே தண்ணீரில் இருந்தார் - அத்திவரதரை மீண்டும் நீராயுவாசம் செய்ய வேண்டாம் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்
Jul 23 2019 11:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிலை திருட்டு பயம் காரணமாகவே அத்திவரதரை, கடந்த காலங்களில் தண்ணீரில் மறைத்து வைத்ததாகவும், மீண்டும் அவரை, தண்ணீரில் நீராயுவாசம் செய்ய வேண்டாம் என்றும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மனவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கடந்த காலங்களில் திருட்டிற்கு பயந்தே, அத்திவரதர் விக்கிரகத்தை கோவில் குளத்தில் நிராயுவாசம் செய்து புதைத்ததாகவும், 40 ஆண்டுகள் கழித்து தற்போது மேலேவந்துள்ள அவரை, மீண்டும் பூமியில் படும்படி நிராயுவாசம் செய்வது நல்லதல்ல என்றும் தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை விடுக்கப்போவதாகவும், அதற்கான முயற்சியை தான் எடுத்து வருவதாகவும் கூறினார். அத்திரவரதர் மேலே வந்ததால்தான் மழை பொழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.