காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் தரிசனம் ரத்து
Jul 19 2019 3:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், இன்று முதல், மூலவர் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
காஞ்சிபுரத்தில், புகழ் பெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்திவரதர் வைபவம், ஜூலை ஒன்றாம் தேதி முதல் தொடங்கி, 19ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்று வரை, 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர், அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், அத்திரவரதர் எழுந்தருளியுள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், இன்று முதல், மூலவர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஐபி தரிசனம் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆன்லைன் டிக்கெட் பெற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.