காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், எழுந்தருளியுள்ள அத்திவரதர் : 18-வது நாளாக இன்றும் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
Jul 18 2019 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், அத்திவரதரை 18-வது நாளாக இன்றும் ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம், கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல வண்ண மலர்கள் மற்றும் பட்டாடைகளில் அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
18-வது நாளாக இன்று, அத்திவரதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அத்திவரதர் ஊதா நிற பட்டாடையில் அருள்பாலித்து வருகிறார். அத்திவரதரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.