நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் 1,464 கிருஸ்தவர்கள் காகிதத்தில் பைபிளை எழுதும் சாதனை நிகழ்ச்சி
May 22 2019 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதன்முதலில் தமிழிலில் பைபிள் அச்சடிக்கப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு, நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் ஆயிரத்து 464 கிருஸ்தவர்கள் காகிதத்தில் பைபிளை எழுதும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதி, டச்சுக் காரர்களின் ஆதிக்கத்தில் இருந்த போது, 1719-ம் ஆண்டு முதன்முதலில் பைபிள் தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. டச்சு நாட்டை சார்ந்த பாதிரியார் சீகன்பால்கு முதன்முதலில் டச்சு நாட்டில் இருந்து அச்சு இயந்திரத்தை தருவித்து, தமிழ் மொழியில் பைபிளை அச்சிட்டார். இதன் 300-ம் ஆண்டு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு, ஆயிரத்து 464 கிறிஸ்தவர்கள் இணைந்து, புனித நூலான பைபிளை எழுதும் வேதாகம சாதனை நிகழ்ச்சி, தரங்கம்பாடியில் நடைபெற்றது. சீகன்பால்கு வாழ்ந்த வீட்டில் நேற்று துவங்கிய நிகழ்ச்சி இன்று வரையில் நடைபெறுகின்றது. ஜெர்மனியை சார்ந்த ஜாஸ்மின்எப்பர்ட் என்ற பெண்மணி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.