திருச்சியில் நத்தர்ஷா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழா : பல்லாயிரக்கணக்கானோர் வழிபாடு
May 21 2019 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் பழமை வாய்ந்த நத்தர்ஷா பள்ளிவாசல் சந்தனக்கூடு விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
திருச்சி மாநகரில் உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் அமைந்துள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் எனப்படும் நத்ஹர்வலி தர்கா, ஆயிரத்து 22 ஆண்டுகள் பழமையும், பெருமையும் வாய்ந்ததாகும். இந்த பழமைவாய்ந்த தர்ஹாவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு வைபவம் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு சந்தனக்கூடு விழா, கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த சந்தனக்கூடு ஊர்வலம், மீண்டும் தர்ஹாவை வந்தடைந்தது.
முன்னதாக ஹஜ்ரத் தபலே ஆலம் பாதுஷா நினைவிடத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து மலர்போர்வை அணிவித்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இதில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.