திருச்சியில் வெக்காளியம்மன் திருக்கோவில் சித்திரை திருத்தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Apr 15 2019 5:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வெக்காளியம்மன் திருக்கோவில் சித்திரை திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்சி உறையூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வெக்காளியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் கடந்த 6-ம் தேதி தொடங்கிய சித்திரை திருவிழாவையொட்டி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாவித்தார். விழாவின் 9-ம் நாளான நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து காலை, அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர்வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோடும் வீதிகள் வழியாக சென்ற திருத்தேர், மதியம் 12 மணியளவில் நிலையை வந்ததடைந்தது. முன்னதாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தீச்சட்டி ஏந்தி வந்து அம்மனை வழிபட்டனர்.