திருச்சி சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் தொடக்கம்
Mar 11 2019 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பக்தர்களின் நலனுக்காக திருச்சி சமயபுரம் மாரியம்மனின் பச்சை பட்டினி விரதம் தொடங்கியது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில், மாசிமாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்செரிதல் விழா நடப்பது வழக்கம்.
இந்நாட்களில் தன்னை நாடிவரும் பக்தர்களின் நலனுக்காகவும், மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், ஈஸ்வரனை நோக்கி அம்பாள் 28 நாள் விரதமிருப்பதாக ஐதீகம். தங்களின் நலனுக்காக விரதமிருக்கும் அம்மனை வாழ்த்தி பூக்களை தூவி பக்தர்கள் வழிபடுவதே பூச்செரிதல் விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி நேற்று விக்னேஷ்வரா பூஜை மற்றும் காப்புக்கட்டுதலுடன் பூச்செரிதல் விழா கோலாகலமாக துவங்கியது.
ஈரோடு காளமேகம் வீதிப்பகுதியிலுள்ள எல்லை மாரியம்மன் கோவிலில் மாசி மாதத் திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோயிலில் நாள்தோறும் மூலவர் மாரியம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்துடன் சிறப்பு வாகனத்தில் திருவீதிவுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெண்கள் மட்டும் கலந்து கொண்ட திருவிளக்குப் பூஜை நேற்று நடைபெற்றது.