ஸ்ரீராதா கல்யாண உற்சவம் - திரளான பக்தர்கள் தரிசனம் : பஜனை பாடல்களுடன் ஆடிப்பாடி வழிபாடு செய்த பக்தர்கள்
Feb 18 2019 3:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் நடைபெற்ற 64ம்ஆண்டு ஸ்ரீராதா கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று பஜனை பாடல்களுடன் ஆடிப்பாடி வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வடக்கு ராமலிங்கதெருவில் 64ம் ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மகோத்ஸவம் நடைபெற்றது. இதில் நாமசங்கீர்த்தனம், அலங்கார திவ்யநாமம், நிச்சய தாம்பூலம், உஞ்சவ்விருத்தி, துரவ சரித்திரம் உள்ளிட்ட சங்கீத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீராதா கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு, பஜனை பாடல்களை பக்திப்பரவசத்துடன் பக்தர்கள் பாடி, வழிபாடு செய்தனர். அதைத்தொடர்ந்து பாகவத புராணம், இசைக்கப்பட்டது. தொடர்ந்து மாங்கல்யதாரண நிகழ்ச்சியுடன், திருக்கல்யாணம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு மகாநதி படப்புகழ் திருமதி.ஷோபனா விக்கேஷின் கர்நாடக இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. இதில், அவர் பாடிய கர்நாடக கீர்த்தனை பாடல்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.