மாசி மாத பிரதோஷம் - தமிழகத்தின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை - பக்தர்கள் தரிசனம்
Feb 19 2019 12:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாசி மாத பிரதோஷத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் உள்ள பெரிய
நந்திக்கு, மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள், தேன், பன்னீர் மற்றும் ஆயிரம் லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபராதனை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி சிவன் கோவிலில் மாசி மாத பிரதோஷம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.