திருநள்ளாறு கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் தொடக்கம் : புனித கலசங்களுக்கு சிறப்பு வழிபாடு
Feb 8 2019 6:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள திருநள்ளாறு கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின.
திருநள்ளாறில் பழமைவாய்ந்த தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம், நவகிரகங்களில் சனி பகவானுக்கு உரிய பரிகார ஆலயமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் தொடங்கியுள்ளன. கலசங்களுக்கு புனித நீர் நிரப்பும் நிகழ்ச்சி மற்றும் கடங்களில் சுவாமி, அம்பாள் மற்றம் பரிவார தேவதைகளை ஆவாஹனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாகசாலை பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து, முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மஹா தீபாராதனைக்கு பிறகு, புனித கலசங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.