மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலம் -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன்
Jan 21 2019 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தைப்பூசம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றான மலேசியாவிலும் இன்று தைப்பூசத் திருவிழா களை கட்டியது.
கோலாலம்பூரின் புறப்பகுதியில் உள்ள பத்துகுகை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் உடம்பில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குடம் ஏந்தியும், காவடி சுமந்தும் வழிபட்டனர்.
அதிகாலை முதலே மலேசிய முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசித்து வருகின்றனர்.