ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் வருஷாபிஷேகம் : ஏராளமானோர் ஆண்டாள் வேடமிட்டு கின்னஸ் சாதனை முயற்சி
Jan 21 2019 3:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, ஏராளமானோர் ஆண்டாள் வேடமிட்டு கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீ ஆண்டாள் கோவில் தங்க விமான சம்ப்ரோக்ஷனம் நடைபெற்றது. இதனையடுத்து வருடம் தோறும் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. நேற்று 3-ம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு, ஸ்ரீவி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி & கலாக்ஷேத்ரா என்ற தனியார் அமைப்பும் இணைந்து, கின்னஸ் முயற்சிக்காக ஆண்டாள் வேடமிடும் போட்டியை நடத்தினர்.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மதபேதமின்றி ஆண்டாள் வேடமணிந்து கலந்து கொண்டு 30 வகையான ஆண்டாள் பாசுரங்களை பாடினர். குறிப்பாக இஸ்லாமிய மாணவி ஒருவர் ஸ்ரீ ஆண்டாள் வேடமணிந்து பங்குபெற்றது. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.