திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் சுவாமி காட்சி தரும் விழா
Jan 16 2019 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாட்டுப் பொங்கலையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், நந்தி பகவானுக்கும், சூரிய பகவானுக்கும் அண்ணாமலையார் காட்சி தரும் விழா விமரிசையாக நடைபெற்றது.
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், மாட்டுப் பொங்கலையொட்டி, வல்லாள மகாராஜா கோபுரம் அருகேயுள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பல்வேறு வகையான காய் - கனிகள், முருக்கு, வடை உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகளைக் கொண்ட மாலை, நந்தி பகவானுக்கு அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது. நேருக்கு நேர் உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, இராஜகோபுரம் அருகேயுள்ள திட்டு வாசல் வழியாக சூரியபகவானுக்கும் காட்சியளித்த பின்னர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 16 கால் மண்டபம் வழியாக திருக்கோயிலை சுற்றி நான்கு மாடவீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்று விளங்கும் கந்தபுராணம் அரங்கேறிய தலமான குமரக்கோட்டம் முருகன் திருக்கோவில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெள்ளித் தேர் வீதியுலா நடைபெற்றது. முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய், வெட்டிவேர் உள்ளிட்ட வைகளால் செய்யப்பட்ட மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வைரவேல் அணிவித்து வெள்ளித்தேரில் எழுந்தளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வெள்ளித் தேரில் எழுந்தருளிய முருகப் பெருமானை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து தரிசித்தனர்.