சபரிமலையில் வழிபட்ட பெண்களுக்கு சங்பரிவார் அமைப்புகள் மிரட்டல் விடுப்பதாக புகார் - வருங்காலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் சபரிமலைக்குச் செல்வார்கள் என்றும் நம்பிக்கை
Jan 11 2019 1:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சங் பரிவார் அமைப்புகள் தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக, சபரிமலையில் தரிசனம் செய்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை அனுமதிக்கக்கூடாது என்ற இந்து அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 2-ம் தேதி பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதற்காக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்களும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தனர். இந்த பேட்டியில், ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகு, சங் பரிவார் அமைப்புகள் தங்களது குடும்பத்திற்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.