சபரிமலையில் ஐயப்பனை வழிபடச் சென்ற பெண் பக்‍தர்கள் இன்றும் தடுத்து நிறுத்தம் - பம்பை, நிலக்‍கல் பகுதிகளில் நீடிக்‍கிறது பதற்றம்

Dec 24 2018 11:51AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலையில், ஐயப்பனை தரிசிக்கச் சென்ற பெண் பக்‍தர்கள் இன்றும் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் கடும் எதிர்ப்பையும் மீறி, பெண் பக்‍தர்கள் சபரிமலைக்‍கு செல்ல முயல்வதால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து நேற்று சபரிமலை வழிபாட்டுக்குச் சென்ற 50க்‍கும் மேற்பட்ட பெண் பக்தர்களை, போராட்டக்காரர்கள் பம்பையிலேயே தடுத்து நிறுத்தினர். அதனை மீறி சிலர் சன்னிதானம் நோக்‍கி செல்ல முயன்றதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று கேரளாவைச் சேர்ந்த 2 பெண் பக்‍தர்கள் சபரிமலைக்‍குச் சென்றனர். இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட போராட்டக்‍காரர்கள் சபரிமலைக்‍கு 2 கிலோ மீட்டருக்‍கு முன்னதாகவே அப்பச்சிமேடு பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. இதை கருத்தில் கொண்டு அங்கு தொடர்ந்து காவல்துறையினர் குவிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00