சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Dec 20 2018 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலையில் 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு
எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்பினரும், பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த அக்டோபர் 17-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது சபரிமலைக்கு வந்த குறிப்பிட்ட சிலர் பெண்களை சாமி தரிசனத்திற்கு செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் சபரிமலை, பம்பை, நிலக்கல் மற்றும் இலவுங்கல் பகுதிகளில் அமலில் இருந்து வந்த தடை உத்தரவை வரும் 22-ம் தேதி நள்ளிரவு வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.