திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து திருவிழா : நம்பெருமாள் சவுரிக்கொண்டை அணிந்து பக்தர்களுக்கு சேவை
Dec 20 2018 5:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து திருவிழாவில், நம்பெருமாள் சவுரிக்கொண்டை அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில், இராப்பத்து விழாவின் இரண்டாம் நாளான நேற்று, நம்பெருமாள் சவுரி கொண்டை அணிந்தும், ரத்தின அபயஹஸ்தம், மார்பில் மகாலட்சுமி பதக்கம், முத்துமாலை, பவளமாலை மற்றும் பின்புறம் மஹரி பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை சூடியபடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளுடன் சொர்க்க வாசலை கடந்து பின்னர் வழிநெடுகிலும் திரண்டு நின்று பக்திப் பரவசத்துடன் ரெங்கா ரெங்கா என்ற முழக்கத்துடன் வழிபட்டனர்.
திருச்சி மாநகரில் பிரசித்திபெற்ற வழிவிடு வேல்முருகன் ஆலயத்தில், உலக நன்மை வேண்டி ஸ்ரீசத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் திரிசதி அர்ச்சனை நடைபெற்றது. புனிதநீர் கொண்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
நெல்லை மாவட்டம் நெல்லையப்பர் கோயிலில் மனோன்மணி அம்மை திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. திருமாங்கல்யத்திற்கு அபிஷேகம் நடைபெற்றதுடன், மங்கல வாத்தியங்கள் முழங்க திருமண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.