மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை மாயமான வழக்கு : கூடுதல் ஆணையர் திருமகள் திருச்சி சிலைகடத்தல் தடுப்புபிரிவு அலுவலகத்தில் ஆஜர்

Dec 19 2018 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலை மாயமான வழக்கில் கைதுசெய்யப்பட்ட கூடுதல் ஆணையர் திருமகள் திருச்சி சிலைகடத்தல் தடுப்புபிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மிகவும் பழமையான சிலைகள் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை, சிலைகடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். பின்னர் கும்பகோணத்திலுள்ள கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போது, திருமகள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, திருச்சியில் உள்ள சிலை திருட்டு தடுப்பு காவல் நிலையத்தில் ஆஜராகும்படி நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து திருமகள் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார்.

இதனிடையே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகள், தங்களை பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக காவல்துறை இயக்குனரிடம் மனு அளித்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் 6 மாதங்களுக்கு மட்டும் பணி ஆணை வழங்கிய நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக பணி புரிந்து வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00