ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Dec 12 2018 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் 5-ம் நாளான இன்று, நம்பெருமாள், தொப்பாரக்கொண்டை, மகாலட்சுமி பதக்கம் மற்றும் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த 7-ம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வரும் நம்பெருமாளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சேவித்து வருகின்றனர். இந்நிலையில், பகல் பத்து விழாவின் 5-ம் நாளான இன்று, சுக்கிரனுக்கு அதிபதியான நம்பெருமாள், தொப்பாரக்கொண்டை, மகாலட்சுமி பதக்கம் மற்றும் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என பக்திக் கோஷமிட்டவாறு, நம்பெருமாளை வணங்கிச் சென்றனர்.