ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Dec 12 2018 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் 5-ம் நாளான இன்று, நம்பெருமாள், தொப்பாரக்கொண்டை, மகாலட்சுமி பதக்கம் மற்றும் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நூற்றியெட்டு வைணவத் தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, கடந்த 7-ம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வரும் நம்பெருமாளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சேவித்து வருகின்றனர். இந்நிலையில், பகல் பத்து விழாவின் 5-ம் நாளான இன்று, சுக்கிரனுக்கு அதிபதியான நம்பெருமாள், தொப்பாரக்கொண்டை, மகாலட்சுமி பதக்கம் மற்றும் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என பக்திக் கோஷமிட்டவாறு, நம்பெருமாளை வணங்கிச் சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00