திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஜம்புகேஸ்வர ஆலய மகாகும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Dec 12 2018 3:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ ஜம்புகேஸ்வர ஆலய 2-ம் கட்ட கும்பாபிஷேக விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவுபெற்று, கடந்த 9-ம் தேதி 48 பரிவார மூர்த்திகள் சன்னதிகளுக்கு முதற்கட்ட அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று 2ம் கட்ட மகாகும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, மூலஸ்தான சன்னதி மற்றும் ராஜகோபுரம் உள்ளிட்ட 7 கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. சிவாச்சார்யார்களால் வேதமந்திரங்கள் முழங்கிட 'ஓம்நமச்சிவாயா' என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இவ்விழாவில், ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. ராஜாமணி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி உள்ளுர்விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.