ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய வைகுண்ட ஏகாதசி பகல்பத்து விழா : நம்பெருமாள் சவுரிகொண்டை, ரத்தினஅபயஹஸ்தம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி
Dec 10 2018 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய வைகுண்ட ஏகாதசி பகல்பத்து விழாவையொட்டி, நம்பெருமாள் சவுரிகொண்டை, ரத்தினஅபயஹஸ்தம் அணிந்து பக்தர்களுக்கு காட்சிஅளித்தார்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தின் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் 3ம் நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நம்பெருமாள் சவுரிக்கொண்டை அணிந்து, திருவாபரணங்களை சூடியபடி தங்கபல்லக்கில் எழுந்தருளினர். உடையவர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பின்தொடர்ந்தனர். ரெங்கா, ரெங்கா என பக்தி முழுக்கத்துடன் பக்தர்கள்தரிசனம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து அரையர் சேவைஎனப்படும் அபிநயம், வியாக்யானம், பெரியாழ்வார் திருமொழி கேட்டருளிய அவர், பக்தர்களுக்கு பொதுஜனசேவை கண்டருளினார்.