திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா : பராசக்தி அம்மன் தெப்போற்சவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Nov 26 2018 4:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பராசக்தி அம்மன் தெப்போற்சவம் நடைபெற்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, திருக்கல்யாண
மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஐய்யங்குளத்தில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன் தெப்போற்சவம் வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. குளத்தை சுற்றி மூன்று முறை தெப்பம் வலம்வந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 18ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி சிறப்பு திருப்பலிகளும், நற்கருணை ஆராதனைகளும், வேண்டுதல் தேர்பவனிகளும் நடைபெற்றது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்கள் முக்கிய வீதிகளில் வலம்வந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.