கார்த்திகை தீபத்திருவிழா : திருவண்ணாமலையில், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுடன், மகாரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
Nov 21 2018 4:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில், அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுடன், மகாரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் விளங்கி வருகிறது. இங்கு கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து காலை மற்றும் மாலை வேளைகளில், பஞ்சமூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீபத்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் எழுந்தருளிய மகாரதத்தை, அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.