கஜா புயலால் வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரம் மற்றும் சிலைகள் சேதம்
Nov 16 2018 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கஜா புயலால் வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரம் மற்றும் சிலைகள் சேதமடைந்தன.
அதி தீவிர கஜா புயலால் நாகை மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக சுற்றுலா தலமான வேளாங்கண்ணியில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர்கோபுர மின்விளக்கு உடைந்ததுடன், வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலுவைகளில், ஒரு சிலுவை கீழே விழுந்து நொறுங்கியது. மேலும், அங்கிருந்த ஏசு நாதர் சிலையும் சேதமடைந்ததுடன், கடைவீதிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர் வசிக்கும் பகுதிகளில் வீடுகளும், படகுகளும் சேதமடைந்தன. இதனால் வேளாங்கண்ணி பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.