திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் : பஞ்சமூர்த்திகள் 4 மாடவீதிகளில் வலம் வந்து அருள்பாலிப்பு

Nov 15 2018 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்‍கோயிலில் திருக்‍கார்த்திகை தீபத்திருவிழாவின் முதல்நாள் உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்‍கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் திருக்‍கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முதல்நாள் இரவு உற்சவத்தில் விநாயகர், முருகர், உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்‍தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்‍கு, கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள திருக்‍கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையார், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளினர். அப்போது, வாணவேடிக்‍கையுடன் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக திருக்‍கோயிலின் நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்‍தர்களுக்‍கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்‍கிய நிகழ்வாக, வரும் 23ம் தேதி அதிகாலை கோயில் கருவறை முன்பு பரணி தீபமும், அன்று மாலை மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00