தமிழகத்தின் பல்வேறு இடங்களில் முருகன் திருக்கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

Nov 14 2018 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் திருக்‍கோயில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்‍கணக்‍கான பக்‍தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

ஆறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலை சோலைமலை முருகன் கோவிலில் சுரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அரோகரா பக்தி கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனா். இன்று திருக்கல்யாண வைபோக நிகழ்வு நடைபெறும்.

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி ஆலயத்தில் நடைபெற்ற சூர சம்ஹார நிகழ்ச்சியில் சுப்ரமணியர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கி சூரபத்மனை வதம் செய்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

கரூர் ஸ்ரீ கல்யாணபசுதீஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி, கோவிலை சுற்றியுள்ள நான்கு மாடவீதிகளில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்தனர். சூரணை முருகன் அழிக்கும்போது பக்தர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

அரியலூரில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் சூரனை, ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்த முருகப்பெருமான் வேல்கொண்டு அழித்து, ஆட்கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோஹரா கோஷத்துடன் முருகப்பெருமானை தரிசித்தனர்.

நாகை மாவட்டம் சிக்கலில் புகழ்பெற்ற சிங்காரவேலர் ஆலயத்தில் சூரசசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதுபோல் வேதாரண்யம், வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற விழாவில் முருகர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. இதே போல், வெண்ணந்தூர் முத்துகுமார சுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.

புதுச்சேரி பெத்துசெட்டிப்பேட்டையில் உள்ள பழமையான ஸ்ரீசித்திவிநாயகர் ஸ்ரீசிவசுப்பிரமணியர் சுவாமி தேவஸ்தானத்தில் 37ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00