முருகப்பெருமானை கொண்டாடும் கந்தசஷ்டி பெருவிழா - 5-ம் படை வீடான திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலின் சிறப்பம்சங்கள்
Nov 12 2018 4:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கந்த சஷ்டி பெருவிழாவின் 5-ம் நாளான இன்று, முருகப் பெருமானின் 5-ம் படை வீடான திருத்தணி வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி திருத்தலத்தின் சிறப்புகள் குறித்து காண்போம்...
முருகப் பெருமான் சூரபத்மனுடன் செய்த போரின்போதும், வள்ளியம்மைக்காக வேடுவர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு கோபமும் தணிந்து அமர்ந்த மலை - குன்றுதோறாடல் என்கிற திருத்தணி. கந்தசஷ்டி பெருவிழாவின்போது, சூரசம்ஹாரம் நிகழ்வு நடத்தப்படாத முருகப் பெருமான் திருத்தலம் திருத்தணியாகும்.
அடியவர்களின் பிழைகளை பொறுத்து முருகப் பெருமான் அருள்பாலிக்கும் சிறப்புக்குரிய திருத்தலமாக விளங்குவது திருத்தணிகை. திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரந்தாதி உள்ளிட்ட நூல்களில், திருத்தணி திருத்தலத்தை அருணகிரிநாதர் போற்றி பாடியுள்ளார். தமிழகத்தின் வடக்கு எல்லையாகவும், சென்னைக்கு மிக அருகிலும் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த திருத்தணி சுப்ரமணியசுவாமி திருத்தலத்தின் சிறப்புகள் குறித்து தற்போது காண்போம்...