மயிலாடுதுறையில் துலா உற்சவம் : காவிரியில் அமாவாசை தீர்த்தவாரி நிகழ்ச்சி - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Nov 8 2018 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையில் துலா உற்சவத்தை முன்னிட்டு, காவிரியில் நடைபெற்ற அமாவாசை தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும்.ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதாக ஐதீகம். அதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு, காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம். நேற்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு, மயூரநாதர் ஆலயத்திலிருந்து சுவாமி, விஸ்வநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயத்திலிருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி, ஐயாரப்பர் ஆலயம் இவற்றிலிருந்து இறைவன் அம்பாளுடன் காவிரிக்கரையின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர். பின்னர் அஸ்திரதேவருக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கிழ்ப்புதுப்பேட்டையில் உள்ள தன்வந்தரி ஆலயத்தில் குபேர சாம்ராஜ்ய மஹாலக்ஷ்மி யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் லக்ஷ்மி, குபேரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில், உள்ள மகாடிலட்சுமி கோயிலில், லட்சுமி குபேரர் பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது. லட்சுமி குபேரருக்கு யாக வேள்வி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலில், சுமங்கலி பெண்கள் கேதார கவுரி விரத நோன்பு கடைபிடித்தனர். இந்த நோன்பை முன்னிட்டு, அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பெண்கள் புது மண் பானைகளில் அதிரசம், நோம்பு கயறு, தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜைப்பொருள்களுடன் வந்து, அன்னை அங்காளம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். முன்பாக பெண்கள், தங்களின் தாலி பாக்கியம் நிலைக்கவும், கணவர்களின் ஆயுள் அதிகரிக்கவும், பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.
இதில் கிருஷஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டனர்.