திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா தொடக்கம்
Nov 7 2018 4:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
ஆறுபடை வீடுகளில் ஒன்றாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டித் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, முதலில் விஸ்வரூப தரிசனமும் பின்னர் உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருள காலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. கந்த சஷ்டி பெருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
கந்தசஹ்டி திருவிழா துவங்கியதும் 6 நாட்கள் ஆயிரக்கணகான பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் இருப்பார்கள். இதற்காக பக்தர்கள் கோவிலில் குவியத்தொடங்கியுள்ளனர்.