தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Nov 7 2018 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில், தன்வந்திரி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் அடுத்த திருமலைக்கோடியில் உள்ள நாராயணி அம்மன் ஆலயத்தில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 10 ஆயிரத்து 8 நெய்விளக்கு தீபங்களால் ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதே போல் வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.