சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு வேண்டும் : கேரள உயர்நீதிமன்றத்தில் 4 பெண்கள் மனு

Oct 24 2018 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் தடுக்கப்படுவதால் அவர்களுக்‍கு போலீஸ் பாதுகாப்பு அளிக்‍க வேண்டி கேரள உயர்நீதிமன்றத்தில் 4 பெண்கள் மனுதாக்‍கல் செய்துள்ளனர்.

சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. எனினும் சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்‍கும் விதமாக ஐய்யப் பக்‍தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் அங்கு போராட்டம் நடைபெற்று வருகின்றன. மேலும், சபரிமலைக்குள் செல்ல முயலும் பெண்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. இந்த தீர்ப்புக்‍கு எதிராக பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்‍கள் மீதான விசாரணை நவம்பர் 13-ம் தேதி விசாரிக்கப்படுகிறது. இந்த பரபரப்புக்‍கு மத்தியில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக்‍கோரி, 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, கோவிலுக்குள் செல்ல பெண்களுக்‍கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00