சபரிமலை வரும் பெண்களுக்‍கு முழு பாதுகாப்பு அளிக்‍கப்படும் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

Oct 16 2018 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைத்து வயது பெண்களையும் சபரி மலையில் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும், பெண்களுக்‍கு கேரள அரசு முழுபாதுகாப்பு அளிக்கும் என்றும் அம்மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசும், தேவசம் போர்டும் நடவடிக்‍கைகள் எடுத்து வருகின்றன. இதனை எதிர்த்து, பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முற்றுகையிடப்பட்டது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ளதால், அதற்குள் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, இறுதிக்கட்ட முயற்சியில் கேரள அரசு இறங்கி உள்ளது. இதற்காக தந்திரி குடும்பத்தினர், பந்தள அரண்மனை பிரதிநிதிகள், ஐயப்ப சேவா சங்கம் மற்றும் இந்து அமைப்புகளுடன் இன்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இன்று காலை சபரிமலை சென்ற பெண்களும், பெண் பத்திரிகையாளர்களும், நிலக்கல் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சூழலில், சபரிமலைக்கு வரும் பெண்களுக்‍கு கேரள அரசு முழு பாதுகாப்பு அளிக்‍கும் என முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்‍கல் செய்யப்போவதில்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு அனைத்து வகையிலும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00