அனைத்து தரப்பினரையும் கவரும் கண்கவர் கொலு : கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டும் நவராத்திரி திருவிழா
Oct 15 2018 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நவராத்திரி விழாவையொட்டி, தமிழகத்திலுள்ள கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைக்கப்பட்டு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முப்பெரும் தேவிகளை போற்றும் நவராத்திரி விழா கடந்த 10-ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள பாடகர் முரளி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏழு அடுக்குகளில் அமைந்துள்ள கொலுவில், பல்வேறு கடவுள்களின் பொம்மைகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. அனுமன், ராவணனிடம் உரையாடும் காட்சி, விளையாட்டு முறைகளை விளக்கும் பொம்மைகள் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது.
ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நவராத்திரியையொட்டி ஒவ்வொரு தினமும், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும், பொய்க்கால் குதிரை ஆட்டமும் காண்போரை வெகுவாக கவர்ந்தன.