தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Oct 11 2018 4:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழாவில் காளி வேடமணியும் பக்தர்களுக்காக, சவுரி முடிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில், மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாலம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா, குலசேகரப்பட்டினம் முத்தாலம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன. பின்னர் கோவில் கொடிபட்டம், கொடிமரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த திருவிழாவின் சிறப்பு அம்சமாக ஏராளமான பக்தர்கள் 10 நாட்கள் அம்மனை வேண்டி பல்வேறு வேடமணிந்து விரதம் இருப்பார்கள். இதனிடையே, காளி வேடமணியும் பக்தர்களுக்காக சவுரி முடிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஹிஷாசுர சம்ஹாரம், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.