திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
Sep 17 2018 3:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் நான்காவது நாள் நிகழ்ச்சியாக, சர்வ பூபால வாகன சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நான்காவது நாள் நிகழ்ச்சியாக, மலையப்பசுவாமி சர்வ பூபாலா வாகனத்தில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சர்வபூபால வாகன சேவையை கோவில் மாடவீதிகளில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இதையடுத்து பெருமாளுக்கு இன்று மாலை ஊஞ்சல் சேவையும், இரவு கருட சேவையும் சிறப்பாக நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் கருட சேவையைக் காண ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். பக்தர்கள் கருட சேவையைக் காண கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.