திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம் : 2 மலைப்பாதைகளும் 24 மணி நேரமும் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதி
Sep 12 2018 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இன்று தொடங்க உள்ள பிரம்மோற்சவ விழாவில், ஆந்திர மாநில முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு பங்கேற்று, அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தைக் காண வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடின்றி வழங்க 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அனைத்து சேவைகள், முன்னுரிமை தரிசனங்கள், விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட், சர்வ தரிசன டிக்கெட் ஆகியவை, பக்தர்கள் வருகைக்கேற்ப குறைந்த அளவில் வழங்கப்படும். திருமலைக்கு வருவதற்கான இரண்டு மலைப்பாதைகளும் 24 மணி நேரமும் திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படும்.