திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா : சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க சப்பரத்தில் சுவாமி வீதி உலா
Sep 6 2018 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழாவை முன்னிட்டு சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று. இத்திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்சிகளில் ஒன்றான சிவப்பு சாத்து நிகழ்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமி சண்முகர், வள்ளி - தெய்வானை அம்பாளுடன் சிவப்பு மலர்களால் அலங்கரிப்பட்ட தங்க சப்பரத்தில் சிவப்பு ஆடை அணிகலன் அணிந்து எழுந்தருளினார். பின்னர் 8 ரத வீதிகளில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் சிவப்பு மலர்களை காணிக்கையாக செலுத்தி சுவாமியை வழிபட்டனர்.