திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா : சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் தொடங்கியது
Aug 30 2018 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
தமிழ் கடவுளான முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் கோவில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்சியான திருத்தேரோட்டம் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது.