ஆண்டிப்பட்டியில் சேர்மலையாண்டி கோவில் சமையல் கூடம் இடித்து தரைமட்டம் : வனத்துறையினருக்கு பக்தர்கள் கடும் கண்டனம்
Aug 29 2018 1:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சேர்மலையாண்டி கோவிலில் கட்டப்பட்ட சிறிய கூடாரம் மற்றும் சமையல் கூடத்தை இடித்து தரைமட்டமாக்கிய வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு, பாலூத்து கிராமத்தில் சிறிய மலைக்குன்றில் சேர்மலையாண்டி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில், சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் நூற்றாண்டுகளாக வணங்கி வருகின்றனர். கிராம மக்கள், நன்கொடை வசூலித்து, கோவில் வளாகத்தில் சிறிய கூடாரம் கட்டி, சமையல் கூடம் கட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சமையல் கூடம் கட்டப்படும் இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறி, அந்த கட்டிடத்தை வனத்துறையினர் இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். வனத்துறையினரின் இந்த அராஜக செயலுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.